இந்திய ராணுவ மேம்பாட்டிற்கு ரூ.10 கோடி வழங்கிய ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி

தனியார் துறையில் மிகவும் பிரபலமான மற்றும் பெரிய வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியானது, அதிகளவிலான பணப் பரிமாற்றம் மற்றும் சொத்துக்களை பாதுகாத்தல் உள்ளிட்டவைகளில் சிறந்து விளங்குகிறது.  இந்த வங்கியானது, கடந்த ஜுன் 30-ம் தேதி வரையில் அமெரிக்காவில் 153 மில்லியன் அளவிற்கு வாடிக்கையாளர்களின் சொத்துக்களை மேலாண்மை செய்து வருகிறது.  தற்போது இந்தியா உள்பட 17 நாடுகளில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி செயல்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், இந்திய ராணுவத்திற்கு ரூ.10 கோடி ரூபாயை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தத் தொகையை இரண்டு கட்டமாக வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தற்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், முதற்கட்டமாக ரூ.5 கோடிக்கான காசோலையை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் சந்தா கோச்சார் வழங்கினார். 



அப்போது, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் சந்தா கோச்சார் பேசுகையில், நமது இந்திய ராணுவத்தினர் எல்லையில் தைரியமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியின் போது, ஒரு சில வீரர்கள் வீரமரணமும் அடைகின்றனர். அவர்களது இறப்பை எத்தனை நிதி கொடுத்தாலும் ஈடுகொடுக்க முடியாது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வழங்கியுள்ள நிதியின் மூலம், உயிரிழந்த ராணுவ வீரர்களின் மகள்களின் ஆதரவுக்காகவும், முன்னாள் ராணுவ வீரர்களின் மனைவிகளை மேற்படிப்பு படிக்க உதவி செய்யப்படும். மேலும், முன்னாள் ராணுவ வீரர்களின் மகள்களின் திருமணங்களும் நடத்த நிதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...