இருகூர் பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு

இருகூர் பகுதியில் கட்டிமுடிக்கப்பட்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராத சுரங்கப் பாலத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சமூக விரோதிகளால் சேதமடைந்து வரும் நூலகத்தினை மாற்றியமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இருகூர் நகர இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

இருகூர் நகரில் பொதுமக்கள் பயன்பெற சுரக்கப்பாலம் அமைக்கும் பணி சமீபத்தில் நிறைவடைந்தது. இருப்பினும் 4 மாதங்களைக் கடந்தும் தார்சாலை செப்பனிடப்படாததால் சுரங்கப்பாலம் சிதலமடைந்து வருகிறது. இதனால் மக்களின் வரிப்பணமே விரயமாகிறது. 

இருகூரில் செயல்பட்டு வரும் நூலகத்தின் மூலம் 500-க்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர். தற்போது நூலகம் அரசு ஆரம்பப் பள்ளி பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மாலை, இரவு நேரங்களில் சமூக விரோதிகளால் நூலகம் மது அருந்தும் கூடாரமாக பயன்படுத்தப்படுகிறது.

மேலும், இருகூர் பேரூராட்சியில் 2வது அத்திக்கடவு குடிநீர் திட்டம் நிறைவடைந்து தட்டுப்பாடு இல்லை. ஆனால், கடந்த மார்ச் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை புதிய குடியிருப்புகளுக்கு புதிய குடிநீர் குழாய் இணைப்பு வழங்க பேரூராட்சி நிர்வாகம் மறுத்து வருகிறது.

எனவே கோவை மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...