பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவிதிட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை குறைத்ததை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்கத்தினர் ஆட்சியரிடம் வழங்கியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரியில் ஒன்றரை லட்சம் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் நடப்பாண்டில் 40,000 பேர் சேர்ந்துள்ளனர்.

இவர்களுக்கு கல்வி உதவிதிட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 85,000 ஆயிரம் ரூபாய் வழங்கி வரப்பட்டது. தற்போது அது 50,000 ரூபாயாக ஆதி திராவிடர் நலத்துறை மூலம் 11.8.2017ல் அரசானை வெளியிடப்பட்டுள்ளது.
இதனால், பொறியியல் கல்லூரியில் பயிலும் ஒன்றரை லட்சம் மாணவர்கள் பாதிக்கபடுவார்கள். எனவே தற்போது வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ள மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்கத்தினர் ஆட்சியரிடம் வழங்கியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரியில் ஒன்றரை லட்சம் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் நடப்பாண்டில் 40,000 பேர் சேர்ந்துள்ளனர்.

இவர்களுக்கு கல்வி உதவிதிட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 85,000 ஆயிரம் ரூபாய் வழங்கி வரப்பட்டது. தற்போது அது 50,000 ரூபாயாக ஆதி திராவிடர் நலத்துறை மூலம் 11.8.2017ல் அரசானை வெளியிடப்பட்டுள்ளது.
இதனால், பொறியியல் கல்லூரியில் பயிலும் ஒன்றரை லட்சம் மாணவர்கள் பாதிக்கபடுவார்கள். எனவே தற்போது வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ள மனுவில் தெரிவித்துள்ளனர்.