கோவை மாநகர் பகுதிகளில் கடந்த பல நாட்களாக இரு சக்கர வாகன திருட்டு அதிகரித்து வருகிறது. தொடர் புகார்களின் அடிப்படையில் போலீசார் இரு சக்கர வாகன கொள்ளையர்களை தேடி வந்தனர். தொடர்ந்து, இருசக்கர வாகன கொள்ளையர்களை பிடிக்க 6 பேர் அடங்கிய தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டுவந்த இரு வாலிபர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த தனிப்படை போலீசார், சுங்கம் ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்களை போலீசார் விசாரித்தனர். அப்போது முறையான ஆவணங்களின்றி இரு சக்கர வாகனங்களை இயக்கியது தொடர்பாக போலீசார் கேள்வி எழுப்பினர். அப்போது முன்னுக்கு பின் முரணான பதில் அளித்த வாலிபர்கள் மீது சந்தேகம் ஏற்படவே போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
விசாரணையில் அவர்கள், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் (24) மற்றும் உக்கடம் பக்தியைச் சேர்ந்த ரியாசுதீன் (23) என்பதும், கோவையில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த நான்கு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
இந்த நிலையில், இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டுவந்த இரு வாலிபர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த தனிப்படை போலீசார், சுங்கம் ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரு வாலிபர்களை போலீசார் விசாரித்தனர். அப்போது முறையான ஆவணங்களின்றி இரு சக்கர வாகனங்களை இயக்கியது தொடர்பாக போலீசார் கேள்வி எழுப்பினர். அப்போது முன்னுக்கு பின் முரணான பதில் அளித்த வாலிபர்கள் மீது சந்தேகம் ஏற்படவே போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
விசாரணையில் அவர்கள், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் (24) மற்றும் உக்கடம் பக்தியைச் சேர்ந்த ரியாசுதீன் (23) என்பதும், கோவையில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த நான்கு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.