செயற்கை பஞ்சு நூலின் மீதான வரியினை குறைத்துள்ளது ஜவுளித்துறைக்கு பயனளிக்கும்- சைமா

செயற்கை பஞ்சு மற்றும் நூலின் மீது 18 சதவிகித சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் துணிக்கு 5 சதவிகித வரி விதிக்கப்பட்டு உள்ளீட்டு வரி எடுப்பது அனுமதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக செயற்கை பஞ்சு மற்றும் நூல் தயாரிப்பாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதனைத்தொடர்ந்து, செயற்கை பஞ்சு நூல் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்று சைமா உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தது.

இதனிடையே, தற்போது செயற்கை பஞ்சு நூலின் மீதான ஜிஎஸ்டி வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதற்கு சைமா பாராட்டுக்கள் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் தலைவர் பி.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியின் சீரிய முயற்சிக்கு பாராட்டுக்கள். அவர் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக செயற்கை நூல் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைப்பதாக ஜிஎஸ்டி கவுன்சில் தனது 22-வது கூட்டத்தில் அறிவித்துள்ளது.

இந்த வரி குறைப்பு நூற்பாலைகள் மற்றும் விசைத்தறி உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதோடு உலகளவில் நமது ஜவுளி உற்பத்தி பொருட்கள் போட்டியிட வசதி செய்யும். மேலும், ஏழை மக்களுக்கு நியாயமான விலையில் துணி கிடைக்கும் என்று சைமா தலைவர் பி.நடராஜன் தெரிவித்துள்ளார்.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...