செயற்கை பஞ்சு நூலின் மீதான வரியினை குறைத்துள்ளது ஜவுளித்துறைக்கு பயனளிக்கும்- சைமா

செயற்கை பஞ்சு மற்றும் நூலின் மீது 18 சதவிகித சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் துணிக்கு 5 சதவிகித வரி விதிக்கப்பட்டு உள்ளீட்டு வரி எடுப்பது அனுமதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக செயற்கை பஞ்சு மற்றும் நூல் தயாரிப்பாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதனைத்தொடர்ந்து, செயற்கை பஞ்சு நூல் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்று சைமா உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தது.

இதனிடையே, தற்போது செயற்கை பஞ்சு நூலின் மீதான ஜிஎஸ்டி வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதற்கு சைமா பாராட்டுக்கள் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் தலைவர் பி.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணியின் சீரிய முயற்சிக்கு பாராட்டுக்கள். அவர் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக செயற்கை நூல் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக குறைப்பதாக ஜிஎஸ்டி கவுன்சில் தனது 22-வது கூட்டத்தில் அறிவித்துள்ளது.

இந்த வரி குறைப்பு நூற்பாலைகள் மற்றும் விசைத்தறி உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதோடு உலகளவில் நமது ஜவுளி உற்பத்தி பொருட்கள் போட்டியிட வசதி செய்யும். மேலும், ஏழை மக்களுக்கு நியாயமான விலையில் துணி கிடைக்கும் என்று சைமா தலைவர் பி.நடராஜன் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...