குற்ற சம்பவங்களை தடுக்க இருசக்கர வாகன தொழிலாளர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்- துணை ஆணையர் பேச்சு


கோவை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக கோவை மண்டல இரு சக்கர வாகன பணிமனை தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோருக்கு குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர் பெருமாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



அப்போது அவர் பேசியதாவது:-

பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு தமிழகத்தில் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இருசக்கர வாகன பணிமனை தொழிலாளர்கள் அனைவரையும் இணைப்பது மகிழ்ச்சி. கோவையில் இரு சக்கர வாகன உதவியுடன் பல குற்றங்கள் நடைபெறுகிறது.



முறைகேடான வாகன மாற்றங்கள் மற்றும் பல்வேறு தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும். இந்த குற்றங்களை யாரிடம் கூறுவது என்பது போன்ற தயக்கம் இனி வேண்டாம். உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ளலாம்.

செயின் பறிப்பு தொடர்பாக தகவல் கிடைத்தால் உடனடியாக தகவல் கொடுக்கலாம்.



நீங்கள் அனைவரும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பில் இணைந்துவிட்டது மிகவும் மகிழ்ச்சி. அதே நேரத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என்ற அங்கீகாரத்தை உங்களுக்கு பாதுகாப்பாக உபயோகித்து குற்றவாளியாக மாறிவிட வேண்டாம். நீங்கள் தவறு செய்தால் காவல்துறையால் அதை அனுமதிக்க முடியாது.

இவ்வாறு கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர் பெருமாள் பேசினார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...