நீலகிரியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் தொடர்பான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் முகாம் அக்டோபர் 3ம் தேதியன்று துவங்கி நடைபெற்று வருகின்றது.
வரும் 31ம் தேதி வரை நடைபெறவுள்ள இம்முகாமில் இன்று (அக்டோபர் 8) மற்றும் அக்டோபர் 22 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை மேற்பார்வையிட சமூக பாதுகாப்பு ஆணையர் லால்வேனா அவர்களை நீலகிரி மாவட்ட தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

இம்முகாம்களில் நீலகிரிக்கு உட்பட்ட வாக்காளர்கள் பங்கேற்று பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் தொடர்பான விண்ணப்பங்களை வழங்கி பயனடையுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, இன்று (அக்டோபர் 8) குன்னூர் சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் ஜே.இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார்.