இந்தியாவில் அடியெடுத்து வைக்கும் ”ஆடி ஏ5” பிராட்பேக்

ஆடி இந்தியா நிறுவனம் ஏ5 ரகத்தில் 3 புதிய மாடல் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஏ5 ஸ்போர்ட்பேக், ஏ5 கேப்ரியோலெட், எஸ் 5 ஸ்போர்ட்பேக் என்ற சொகுசு கார்களை வெளியிட்டுள்ளது.



இந்த கார்களின் விலை முறையே ரூ.54.02 லட்சம், ரூ.67.15 லட்சம், ரூ.70.60 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஏ5 ஸ்போர்ட்பேக், ஏ5 கேப்ரியோலெட் ரகமும் இந்தியாவுக்கு புதிதாக அறிமுகமாகும் மாடல்கள் எனவும், எஸ் 5 மட்டும் அப்கிரேட் செய்யப்பட்ட ரகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



புதிதாக மேம்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன், உயர் செல்திறன்மிக்க ஓட்டங்கள், புதுமை படைக்கும் பொழுதுபோக்கு அம்சத்துக்கான தீர்வுகள், வீர்ச்சுவல் காக்பிட் மற்றும் ஆடி இன்டர்பேஸ் மொபைல்போன் போன்ற சிறப்பம்சங்களுடன் இந்தக் கார்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 



ஆடி இந்தியாவின் தலைவர் ரகில் அன்சாரி கூறுகையில், ஆடியின் மறுகட்டமைப்பு ஆண்டாக 2017 உள்ளது. ஏ5 வகை இந்த புதிய சகாப்தத்தின் துவக்கம். புதிய மாடல், புதிய பிரிவுகளில் அறிமுகப்படுத்தி இந்தியாவில் சொகுசான ஒரு பயணத் தீர்வை உருவாக்கின்றனர்.  ஏ5 ஸ்போர்ட்பேக், ஏ5 கேப்ரியோலெட், எஸ் 5 ஸ்போர்ட்பேக் போன்ற கார்களை அறிமுகம் செய்வதன் மூலம் இந்தியாவில் 2017-ல் எங்களது அறிமுக இலக்கான 10 எண்ணிக்கையை எட்டி விட்டோம்.  என்றார். 



ஆடி கோயம்புத்தூர் முதன்மை டீலர் அனந்தகிருஷ்ணன் பேசுகையில், ஆடி ஏ5 இந்த மண்டலத்தில் சந்தைப்பங்கினை அதிகரிக்கும். அனைவரும் ஆவலுடன்  இந்த ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட தயாரிப்பு தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...