ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் திருத்தம் செய்து வருகிறது. இதற்கான சுருக்க திருத்தப்பணி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் நடைபெறும். முதலில் அதன் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடும். அந்த வகையில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

அதில், 14 லட்சத்து 20 ஆயிரத்து 408 ஆண் வாக்காளர்களும், 14 லட்சத்து 40 ஆயிரத்து 845 பெண் வாக்காளர்களும், 283 மூன்றாம் பாலினத்தினரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர்/ சமூக பாதுகாப்புத்துறை ஆணையர் ஆர்.லால்வணோ, அனைத்துக் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில், ஆட்சியர் ஹரிஹரன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் காந்திமதி, கோட்டாட்சியர்கள் மதுராந்தகி, ஆர்.சின்னசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அதில், 14 லட்சத்து 20 ஆயிரத்து 408 ஆண் வாக்காளர்களும், 14 லட்சத்து 40 ஆயிரத்து 845 பெண் வாக்காளர்களும், 283 மூன்றாம் பாலினத்தினரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர்/ சமூக பாதுகாப்புத்துறை ஆணையர் ஆர்.லால்வணோ, அனைத்துக் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில், ஆட்சியர் ஹரிஹரன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் காந்திமதி, கோட்டாட்சியர்கள் மதுராந்தகி, ஆர்.சின்னசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.