கோவை ராஜஸ்தானி சங்கம் சார்பில் இன்று பசுக்களை பாதுகாக்க நிதி திரட்டும் நடன நிகழ்ச்சி



கோவை, ஆர்.எஸ்.புரத்தில் செயல்பட்டு வரும் ராஜஸ்தானி சங்கம் சார்பில் கோவையில் ராஜஸ்தானி எரியூட்டு மையம் அமைக்கவும், பசுக்களை பாதுகாக்கவும் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, இன்று (அக்.,7) மாலை ஆர்.எஸ். புரத்தில் உள்ள ராஜஸ்தானி சங்கத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சியை ராஜஸ்தானி சங்கம் நடத்துகிறது. முக்தி தம் என்ற ராஜஸ்தானி எரியூட்டு மையம் கட்டவும், பசுக்களை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் "கோசாலா"வுக்காவும் இதில் நிதி திரட்டப்படுகிறது.



இது குறித்து கோவையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஸ்வா அன் தேவ்ஜி டைமன்ட்ஸ் விஸ்வநாதன் மற்றும் ராஜஸ்தானி சங்க செயலாளர் பன்சி சங் சவ்கான் ஆகியோர் கூறியதாவது:-

"இளம் நடன கலைஞர்களை உருவாக்கி வரும் ராஜ் அட்ரோஜா டான்ஸ் ஸ்டுடியோ இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது. நல்ல காரணங்களுக்கான நடனத்தை ராஜ் அட்ரோஜா இந்த நிகழ்ச்சியின் மூலம் துவக்குகிறது.

இந்த நிகழ்ச்சியில் 600 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்தி தம் என்ற ராஜஸ்தானி எரியூட்டு மையம் கட்டவும், பசுக்களை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோசாலாவுக்காவும் இதில் நிதி திரட்டப்படுகிறது" என்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...