தனியார் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு இறுதிகட்டத்தில் அரசு மருத்துவமனையை அணுகுவதே உயிர் பலிக்கு காரணம் - கோவை மாவட்ட ஆட்சியர்

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு இறுதிகட்டத்தில் அரசு மருத்துவமனையை அணுகுவதே உயிர்பலிக்கு காரணம் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 20 பேரும், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 190 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று திடீர் ஆய்வினை மேற்கொண்டார். 

தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இன்று அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆய்வினை மேற்கொண்டேன். காய்ச்சல் வார்டுகளை பார்வையிட்டுள்ளேன். அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவ வசதி உள்ளது. மருத்துவர்கள், மருத்துவ கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் போதுமான அளவில் உள்ளனர்.

கோவை மட்டுமல்லாது நீலகிரி, நாமக்கல், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்களும் இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



காய்ச்சல் காரணமாக இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பொதுமக்கள் தீவிர சிகிச்சையின் மூலம் காப்பாற்றப்பட்டு விடுகின்றனர். ஆனால், காய்ச்சல் ஏற்பட்டவுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவிட்டு உயிருக்கு ஆபத்தான நேரத்தில் மட்டும் அரசு மருத்துவமனையை அணுகும் போது பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறினார். 

மாவட்ட ஆட்சியரின் இந்த கருத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பொதுமக்களிடையே பீதியை உண்டாக்கியுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...