காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு இறுதிகட்டத்தில் அரசு மருத்துவமனையை அணுகுவதே உயிர்பலிக்கு காரணம் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 20 பேரும், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 190 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று திடீர் ஆய்வினை மேற்கொண்டார்.
தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இன்று அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆய்வினை மேற்கொண்டேன். காய்ச்சல் வார்டுகளை பார்வையிட்டுள்ளேன். அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவ வசதி உள்ளது. மருத்துவர்கள், மருத்துவ கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் போதுமான அளவில் உள்ளனர்.
கோவை மட்டுமல்லாது நீலகிரி, நாமக்கல், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்களும் இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காய்ச்சல் காரணமாக இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பொதுமக்கள் தீவிர சிகிச்சையின் மூலம் காப்பாற்றப்பட்டு விடுகின்றனர். ஆனால், காய்ச்சல் ஏற்பட்டவுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவிட்டு உயிருக்கு ஆபத்தான நேரத்தில் மட்டும் அரசு மருத்துவமனையை அணுகும் போது பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறினார்.
மாவட்ட ஆட்சியரின் இந்த கருத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பொதுமக்களிடையே பீதியை உண்டாக்கியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 20 பேரும், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 190 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று திடீர் ஆய்வினை மேற்கொண்டார்.
தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இன்று அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆய்வினை மேற்கொண்டேன். காய்ச்சல் வார்டுகளை பார்வையிட்டுள்ளேன். அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவ வசதி உள்ளது. மருத்துவர்கள், மருத்துவ கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் போதுமான அளவில் உள்ளனர்.
கோவை மட்டுமல்லாது நீலகிரி, நாமக்கல், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்களும் இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காய்ச்சல் காரணமாக இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பொதுமக்கள் தீவிர சிகிச்சையின் மூலம் காப்பாற்றப்பட்டு விடுகின்றனர். ஆனால், காய்ச்சல் ஏற்பட்டவுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவிட்டு உயிருக்கு ஆபத்தான நேரத்தில் மட்டும் அரசு மருத்துவமனையை அணுகும் போது பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறினார்.
மாவட்ட ஆட்சியரின் இந்த கருத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பொதுமக்களிடையே பீதியை உண்டாக்கியுள்ளது.