தனியார் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு இறுதிகட்டத்தில் அரசு மருத்துவமனையை அணுகுவதே உயிர் பலிக்கு காரணம் - கோவை மாவட்ட ஆட்சியர்

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு இறுதிகட்டத்தில் அரசு மருத்துவமனையை அணுகுவதே உயிர்பலிக்கு காரணம் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 20 பேரும், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 190 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்று திடீர் ஆய்வினை மேற்கொண்டார். 

தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இன்று அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆய்வினை மேற்கொண்டேன். காய்ச்சல் வார்டுகளை பார்வையிட்டுள்ளேன். அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவ வசதி உள்ளது. மருத்துவர்கள், மருத்துவ கண்காணிப்பாளர்கள் மற்றும் உதவியாளர்கள் போதுமான அளவில் உள்ளனர்.

கோவை மட்டுமல்லாது நீலகிரி, நாமக்கல், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்களும் இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



காய்ச்சல் காரணமாக இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் பொதுமக்கள் தீவிர சிகிச்சையின் மூலம் காப்பாற்றப்பட்டு விடுகின்றனர். ஆனால், காய்ச்சல் ஏற்பட்டவுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவிட்டு உயிருக்கு ஆபத்தான நேரத்தில் மட்டும் அரசு மருத்துவமனையை அணுகும் போது பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறினார். 

மாவட்ட ஆட்சியரின் இந்த கருத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பொதுமக்களிடையே பீதியை உண்டாக்கியுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...