அப்துல்கலாம் உருவத்தில் அரசு மருத்துவமனைக்கு வந்த நபரால் பொதுமக்கள் நெகிழ்ச்சி



கோவை அரசு மருத்துவமனையில் உள்ள இருப்பிட மருத்துவ அதிகாரி அலுவலகத்திற்கு அப்துல்கலாம் உருவத்தில் ஒருவர் வந்தார். அவரை பார்த்த பொதுமக்கள் பலரும் வணங்கியதோடு அவரோடு 'செல்பி' எடுத்துக்கொண்டனர்.

இதையறிந்த செய்தியாளர்கள் பலரும் அவரிடம் பேட்டி காண திரண்டனர். அப்போது அவர் கூறியதாவது:- 

எனது பெயர் உடுமலை கலாம். மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் உருவத்திலே இருப்பதால் என்னை அனைவரும் உடுமலை கலாம் என்றே அழைக்க தொடங்கிவிட்டனர்.

உடுமைலை பகுதியில் பெயிண்டராக பணியாற்றி வருகிறேன். அப்துல்கலாம் போன்ற தோற்றம் இருப்பதற்கு எந்த ஒப்பனைகளையும் செய்துகொளவது இல்லை. இயற்கையாகவே எனக்கு அந்த உருவத்தை கடவுள் கொடுத்துள்ளார்.

இரு முறை அப்துல்கலாமை சந்தித்துள்ளேன். அவரைப்போலவே இருப்பதால், என்னை பல்வேறு கிராமப்பகுதிகளுக்கு சென்று உரையாற்ற கூறினார். நிதி வசதியும், கல்வியறிவும் இல்லை என்று அவரிடம் கூறினேன். உதவும் இளைஞர்கள் அமைப்புடன் இணைந்து பணியாற்ற வலியுறுத்தினார். தற்போது அந்த அமைப்பினருடன் சமூகப்பணியாற்றி வருகிறேன்.

இதுவரை 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று கிராமப்புற மேம்பாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். அதோடு, பள்ளி மற்றும் கல்லூரிகளில் அப்துல்கலாம் உரையாற்றியது போலவே மாணவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் உரை நிகழ்த்தி வருகிறேன்.

என்னை பார்த்து பலரும் அப்துல்கலாம் என்றே நினைத்து புகைப்படம் எடுத்துகொள்வது பெருமையாகவே உள்ளது. தற்போது இதய சிகிச்சைக்காக கோவை வந்துள்ளேன். இங்கு அரசு மருத்துவ அதிகாரிகளும், பொதுமக்களும் எனக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, திடீரென அப்துல்கலாம் உருவத்தில் வந்த நபரை பார்த்து பொதுமக்கள் வியப்படைந்தனர். தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனை இருப்பிட அதிகாரி சவுந்திரவேல், உடுமலை கலாம்  உடன் புகைப்படம் எடுத்துகொண்டார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...