கோவை கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் கிருபா (18). மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்பிய கிருபா வீட்டில் இருந்த சாணி பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை அறிந்த அவரது பெற்றோர் சூலூர் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாணவி கிருபா உயிரிழந்தார்.
இதனைத்தொடர்ந்து, கல்லூரியில் பயிலும் சக மாணவர்கள் ஈவ்டீசிங் செய்தது தான் மாணவியின் மரணத்திற்கு காரணமா என்ற கோணத்தில் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை கல்லூரி முடிந்து வீடு திரும்பிய கிருபா வீட்டில் இருந்த சாணி பவுடரை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை அறிந்த அவரது பெற்றோர் சூலூர் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாணவி கிருபா உயிரிழந்தார்.
இதனைத்தொடர்ந்து, கல்லூரியில் பயிலும் சக மாணவர்கள் ஈவ்டீசிங் செய்தது தான் மாணவியின் மரணத்திற்கு காரணமா என்ற கோணத்தில் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.