வால்பாறை எஸ்டேட்டில் குடியிருப்பு பகுதிகளை சேதம் செய்த காட்டு யானைக் கூட்டம்

வால்பாறை அடுத்த நல்லமுடி எஸ்டேட் பகுதியில் வனத்துறையினர் முகாம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டு யானைக் கூட்டம் அங்கு அமைந்துள்ள ரேசன் கடையின் கதவை உடைத்து சேதப்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து, அங்கிருந்த சென்ற யானைக் கூட்டம் எஸ்டேட் நிர்வாகத்திற்குச் சொந்தமான உரக்கிடங்கின் சுவற்றை உடைத்து அங்கிருந்த உர மூட்டைகளை சேதப்படுத்தியது.

மேலும், தாய்முடி டிவிசன் பகுதியில் சின்னதுறை என்பவரது வீட்டின் சுவற்றையும் உடைத்தது. இதனைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் கூச்சலிடவே அருகில் இருந்த நல்லமுடி வனப்பகுதிக்குள் யானைகள் தஞ்சமடைந்தன. இதனால், அப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடைவித்து வருகின்றனர்.

இதனிடையே, வால்பாறைக்கு உட்பட்ட கல்யாணபந்தல் எஸ்டேட் குடியிருப்புப் பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் மதி என்பவரின் கடை கதவினையும், அருகாமையில் இருந்த கணேசன், ராஜன், தர்மலிங்கம் ஆகியோரின் வீட்டின் ஜன்னல், கதவினையும் உடைத்து சேதப்படுத்தியது. 

இதுகுறித்து எஸ்டேட் பகுதி மக்கள் கூறுகையில், வனத்துறையினரின் முகாம் அருகே அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் யானைகள் அடிக்கடி நுழைந்து சேதப்படுத்தி வருகிறது. இருப்பினும், வனத்துறையினர் அதனை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்வதில்லை என்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...