கோவையில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து சிறப்பு கிராமசபைக் கூட்டம்

கோவை மாவட்டத்தில் மகாத்மாக காந்தி வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், சமூக தணிக்கை மேள்கொள்வது குறித்தும் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

கோவை மாவட்டத்திலுள்ள மதுக்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாச்சிப்பாளையம், சர்க்கார்சாமகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளானைப்பட்டி, தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தென்னமநல்லூர், பொள்ளாச்சி (வடக்கு) ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிக்கராயபுரம், ஆர்.பொன்னாபுரம் அன்னூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் 2016- 17ஆம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து சமூக தணிக்கை மேற்கொள்ள ஊரக வளர்ச்சி சமூக தணிக்கை இயக்குநர் தெரிவித்துள்ளதன் அடிப்படையில் சமூகத் தணிக்கை தொடர்பான அறிவுரைகள் குறித்த தகவல் வழங்க சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

வரும் அக்டோபர் 11 அன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...