தபால்நிலையத்திற்கு சொந்தமான காலியிடங்களில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் இந்தியா தபால் நிலையத்திற்கு சொந்தமான 42 சென்ட் காலியிடம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக புதர்கள் மண்டியும், குப்பைகுளமாகவும் அந்த இடம் காட்சியளித்து வந்தது. 

இந்த நிலையில், பசுமை இந்தியாவாக மாற்றும் முயற்சியில் தபால்துறையும், கோவை லயன்ஸ் கிளப்பும் இணைந்து, தபால் நிலையத்திற்கு சொந்தமான காலியிடத்தில் இருந்த குப்பைகள் மற்றும் புதர்கள் அகற்றப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், சுத்தம் செய்யப்பட்ட இடங்களில் 300 மரக்கன்றுகளை நடும்பணி தொடங்கியது. கோவை தெற்குபிரிவு தபால்நிலைய ஆய்வாளர் ஏ.என். சாந்தினி பேகம் தலைமையில் அதிகாரிகள் சாரதா சம்பத், சித்ராதேவி உள்பட பலர் மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டனர். 

இது தொடர்பாக கோவை தெற்குபிரிவு தபால்நிலைய ஆய்வாளர் ஏ.என். சாந்தினி பேகம் பேசுகையில், தபால்நிலையத்திற்கு சொந்தமான காலியிடங்களில் மரக்கன்றுகள் நடுவதன் மூலமாக சுற்றுப்புறச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. பொதுமக்களும் அவர்களால் முடிந்த மரக்கன்றுகளை நடவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிட்கோ பகுதியில் தபால்நிலையத்திற்கு சொந்தமான உள்ள 25 சென்ட் காலியிடத்தில் சுத்தம் செய்யப்பட்டு, 110 மரக்கன்றுகள் நடப்பபட்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...