தபால்நிலையத்திற்கு சொந்தமான காலியிடங்களில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரம்

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் இந்தியா தபால் நிலையத்திற்கு சொந்தமான 42 சென்ட் காலியிடம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக புதர்கள் மண்டியும், குப்பைகுளமாகவும் அந்த இடம் காட்சியளித்து வந்தது. 

இந்த நிலையில், பசுமை இந்தியாவாக மாற்றும் முயற்சியில் தபால்துறையும், கோவை லயன்ஸ் கிளப்பும் இணைந்து, தபால் நிலையத்திற்கு சொந்தமான காலியிடத்தில் இருந்த குப்பைகள் மற்றும் புதர்கள் அகற்றப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், சுத்தம் செய்யப்பட்ட இடங்களில் 300 மரக்கன்றுகளை நடும்பணி தொடங்கியது. கோவை தெற்குபிரிவு தபால்நிலைய ஆய்வாளர் ஏ.என். சாந்தினி பேகம் தலைமையில் அதிகாரிகள் சாரதா சம்பத், சித்ராதேவி உள்பட பலர் மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டனர். 

இது தொடர்பாக கோவை தெற்குபிரிவு தபால்நிலைய ஆய்வாளர் ஏ.என். சாந்தினி பேகம் பேசுகையில், தபால்நிலையத்திற்கு சொந்தமான காலியிடங்களில் மரக்கன்றுகள் நடுவதன் மூலமாக சுற்றுப்புறச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. பொதுமக்களும் அவர்களால் முடிந்த மரக்கன்றுகளை நடவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிட்கோ பகுதியில் தபால்நிலையத்திற்கு சொந்தமான உள்ள 25 சென்ட் காலியிடத்தில் சுத்தம் செய்யப்பட்டு, 110 மரக்கன்றுகள் நடப்பபட்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...