வட இந்தியாவில் திருமணமான இந்து பெண்கள் கொண்டாடும் "கர்வா சவுத்" விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் திருமணமான பெண்கள், தங்களது கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என கடவுளிடம் பிரார்த்தனை செய்வார்கள். திருமணமான பெண்கள் ஒரு மணமகள் போல ஆடை அணிந்து, வளையல் உள்ளிட்ட நகைகள் மற்றும் பொட்டு வைத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான "கர்வா சவுத்" விழா நாளை (அக்.,6) பாப்பிஸ் ஹோட்டலில் (Poppy's hotel) மாலை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியினை அமிகோஸ் செயிம்பிரி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
"கர்வா சவுத்" விழா குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சந்தீப் பேசுகையில், இந்த பெண்களுக்கான அழகுப் போட்டியல்ல. ஒவ்வொரு திருமணமான பெண்ணும் அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான மேடையாக இது உள்ளது. போட்டி பங்கேற்பாளர்கள் மேடையில் அணிவகுத்து வரும் போது, அவர்களது உடல் வடிவமைப்பு, வயதுகளை பொருட்படுத்தாமல் அவர்களது ஆர்வம், நம்பிக்கை மற்றும் வெளிப்பாடு போன்றவை அடிப்படையாக கொண்டே வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.
"கர்வா சவுத்" விழாவில் திருமணமான பெண்களுக்கான ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெறுகிறது.