டெங்கு மண்டலமாகும் கொங்கு மண்டலம்- கோவையில் ஒரேநாளில் இருவர் பலி


கோவையில் கடந்த சில மாதங்களாகவே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த இரு மாதங்களில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 30-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர்.

இந்த நிலையில், கோவையில் இன்று ஒரே நாளில் இருவர் பலியான சம்பவம் டெங்கு குறித்தான அரசின் நடவடிக்கை மீது அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் முக்தி முண்டா (18). இவர் கடந்த 10 நாட்களுக்கு முன் கோவைக்கு மில் வேலைக்காக வந்தார். 

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மில் ஒன்றில் கூலி வேலை செய்து வந்த அவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முக்தி முண்டா-விற்கு மஞ்சள் காமாலை இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், அவரது உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து பரிசோதனை மேற்கொள்கையில் அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். ஆனால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே முக்தி முண்டா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே, சிறுமுகை இரும்புப்பாறை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான காவேரி (25) கடந்த 10 நாட்களாக டெங்கு காய்ச்சலால் அவதியுற்று வந்துள்ளார். இதற்காக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை உயிரிழந்தார்.

கோவை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் தொடர்ந்து டெங்கு குறித்தான பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், டெங்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என அறிவித்து வரும் நிலையில், தொடர்ந்து கோவையில் டெங்குவினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் சம்பவம் பொதுமக்களிடையே அரசு நிர்வாகத்தின் மீது அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...