நீலகிரி மாவட்டம் உதகை மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் இன்று (04.10.2017) நடைபெற்றது இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பெற்றுக் கொண்டார்.
மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் ”தூய்மையே சேவை” இயக்கத்தின் கீழ் நடந்த பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ஆட்சியர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
இதைத் தொடர்ந்து, உதகை பிரிக்ஸ் பள்ளியில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கான அதிகாரங்களும், கடமைகளுக்கான சிறப்புத் தேர்வை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரபாண்டியன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் ”தூய்மையே சேவை” இயக்கத்தின் கீழ் நடந்த பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ஆட்சியர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
இதைத் தொடர்ந்து, உதகை பிரிக்ஸ் பள்ளியில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கான அதிகாரங்களும், கடமைகளுக்கான சிறப்புத் தேர்வை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரபாண்டியன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.