விளையாட்டுத் துறையில் குழந்தைகளின் பங்களிப்பை பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும்- கோவையில் இறகு பந்து வீராங்கனை பி.வி.சிந்து பேட்டி



கோவையில் தனியார் விளையாட்டு மையமான விஷன்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி-யின் துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த பி.வி.சிந்து சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கையில் அவர் கூறியதாவது:-

"எந்த விளையாட்டாக இருந்தாலும் அடிப்படையை புரிந்து கொண்டு விளையாட வேண்டும். அப்போதுதான் திறமையை வெளிப்படுத்த முடியும். தொடர்ந்து பயிற்சி பெறுவதன் மூலமே வெற்றியை அடைய முடியும். 

நான் தொடர்ந்து பயிற்சி எடுத்ததன் காரணமாகவே வெற்றி பெற முடிந்தது. பல்வேறு நாட்டு வீரர்களுடன் விளையாடும் போது அவர்களின் நுட்பங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. இதனால் புதிய அனுபவங்களும் ஏற்படுகிறது. 

விளையாட்டுத் துறையில் குழந்தைகளின் பங்களிப்பை பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும். இந்தியாவிற்காக விளையாடும் போது நான் வெற்றி பெற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். கிரிக்கெட் விளையாட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் என்ற நிலை மாறி உள்ளது.

ஒலிம்பிக் போட்டிக்கு பின்னர் இறகு பந்து போட்டியிலும் அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்துகின்றனர். இது வரவேற்கத்தக்க ஒன்று.

அரசு பள்ளி மாணவர்களின் விளையாட்டின் மீதான ஆர்வத்தை திறன் வாய்ந்த பயிற்சியாளர்கள் மூலம் வெளிக்கொணர்ந்து சர்வதேச போட்டிகளுக்கு தயார் செய்ய வேண்டும். கோவை போன்ற பகுதிகளில் இதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது" என்றார்.

தொடர்ந்து, இந்தியா போன்ற பெரிய நாட்டில் குறிப்பிட்ட சில வீர்ரகள் மட்டுமே சாதிக்க முடிகின்றது என்ற செய்தியாளரின் கேள்விக்கு, "தற்போதைய நிலையில் புதிய இளம் வீரர்கள் உருவாகிக்கொண்டுதான் இருக்கின்றனர்" என்றார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...