கோவை மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக மாநகர காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:-
வேகமாக வாகனங்களை இயக்குதல், சிக்னல்களை மதிக்காமலும், செல்போனில் பேசிக்கொண்டும் வாகனங்களை இயக்குதல், சரக்கு வாகனங்களில் அதிக பாரம் மற்றும் ஆட்களை ஏற்றிச்செல்லுதல் போன்றவை வாகன விதிமீறல்களாகும். உச்ச நீதிமன்ற சாலை பாதுகாப்பு கமிட்டியானது, சாலை விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களின் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கோவை மாநகர காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
2017-ம் ஆண்டில் மட்டும் சாலை விதிகளை மீறியதாக 17 ஆயிரத்து 887 வழக்குகள் பதியப்பட்டு அதில் 16 ஆயிரத்து 574 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றை ரத்து செய்ய அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்க சம்மந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டது.
இது தொடர்பாக மாநகர காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:-
வேகமாக வாகனங்களை இயக்குதல், சிக்னல்களை மதிக்காமலும், செல்போனில் பேசிக்கொண்டும் வாகனங்களை இயக்குதல், சரக்கு வாகனங்களில் அதிக பாரம் மற்றும் ஆட்களை ஏற்றிச்செல்லுதல் போன்றவை வாகன விதிமீறல்களாகும். உச்ச நீதிமன்ற சாலை பாதுகாப்பு கமிட்டியானது, சாலை விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களின் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கோவை மாநகர காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
2017-ம் ஆண்டில் மட்டும் சாலை விதிகளை மீறியதாக 17 ஆயிரத்து 887 வழக்குகள் பதியப்பட்டு அதில் 16 ஆயிரத்து 574 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றை ரத்து செய்ய அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்க சம்மந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டது.