கோவையில் போக்குவரத்து விதிகளை மீறினால் ஓட்டுநர் உரிமம் ரத்து : மாநகர காவல்துறை அறிவிப்பு

கோவை மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 

இது தொடர்பாக மாநகர காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:- 

வேகமாக வாகனங்களை இயக்குதல், சிக்னல்களை மதிக்காமலும், செல்போனில் பேசிக்கொண்டும் வாகனங்களை இயக்குதல்,  சரக்கு வாகனங்களில் அதிக பாரம் மற்றும் ஆட்களை ஏற்றிச்செல்லுதல் போன்றவை வாகன விதிமீறல்களாகும்.  உச்ச நீதிமன்ற சாலை பாதுகாப்பு கமிட்டியானது, சாலை விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களின் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கோவை மாநகர காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

2017-ம் ஆண்டில் மட்டும் சாலை விதிகளை மீறியதாக 17 ஆயிரத்து 887 வழக்குகள் பதியப்பட்டு அதில் 16 ஆயிரத்து 574 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றை ரத்து செய்ய அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்க சம்மந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...