நீலகிரியில் பொது மக்கள் தங்களது குறை தீர்க்கும் கோரிக்கைகளை தெரிவிக்க "உங்களின் சேவை" அறிமுகம்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்கள் தங்களது குறை தீர்க்கும் கோரிக்கைகளை தெரிவிக்க உங்களின் சேவை என்ற வாட்ஸ் அப், ட்விட்டர் மற்றும் முகநூல் பயன்பாட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து ஆட்சியர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்ட பொது மக்கள் தங்களது குறைதீர்க்கும் கோரிக்கைகளை பிரதி வாரம் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் அக்டோபர் 3-ம் தேதி முதல் "உங்களின் சேவையில்" பொது மக்கள் தங்களது கோரிக்கை மனுக்கள், புகார் மனுக்கள் மற்றும் கருத்துகளை மாவட்ட ஆட்சியரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு தெரிவிக்கலாம்.

மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியரின் முகநூல் பதிவு மற்றும் ட்விட்டர் மூலமாக பொதுமக்கள் கீழ்க்கண்ட இணைய வழியை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

இணைய வழி முகவரி:

www.facebook.com/collector Nilgiris

www.twitter.com/collrnlg

மாவட்ட ஆட்சியரின் வாட்ஸ்அப் எண்: 99431 26000.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...