மதுபானக் கடை வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டவர் மது போதையால் உயிரிழப்பு

கோவை மாவட்டத்தில் மதுக்கடை வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களில் ஒருவர் மது குடித்ததால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் மதுபானக் கடைகளுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டம் சூலூர் அடுத்த செங்கத்துறை கிராமத்தில் மதுக்கடைக்கு ஆதரவாக மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த குடிமகன்கள் செவ்வாய்க்கிழமையன்று சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இந்நிலையில் மதுக்கடை வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரான ஆறுமுகம் என்பவர் செவ்வாய்க்கிழமை இரவு அளவிற்கு அதிகமாக மது குடித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து புதன்கிழமை காலை தூக்கத்தில் இருந்து அவரை எழுப்பி உள்ளனர். அப்போது அவர் மயக்க நிலையில் இருந்ததையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சோதனை செய்த போது அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. 

இது குறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறுகையில், மதுக்கடை வேண்டும் என ஆளும் கட்சியினர் குடிமகன்களை திரட்டி போராட்டம் மேற்கொண்டனர். அந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு இலவசமாக மது வழங்கினர். அவர்கள் அளித்த இலவச மதுவால் தான் ஆறுமுகம் இறந்துவிட்டார் என்றனர்.

மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் கிராமத்தில் மது குடித்து ஒருவர் உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...