மதுபானக் கடை வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டவர் மது போதையால் உயிரிழப்பு

கோவை மாவட்டத்தில் மதுக்கடை வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களில் ஒருவர் மது குடித்ததால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் மதுபானக் கடைகளுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்டம் சூலூர் அடுத்த செங்கத்துறை கிராமத்தில் மதுக்கடைக்கு ஆதரவாக மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த குடிமகன்கள் செவ்வாய்க்கிழமையன்று சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இந்நிலையில் மதுக்கடை வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரான ஆறுமுகம் என்பவர் செவ்வாய்க்கிழமை இரவு அளவிற்கு அதிகமாக மது குடித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து புதன்கிழமை காலை தூக்கத்தில் இருந்து அவரை எழுப்பி உள்ளனர். அப்போது அவர் மயக்க நிலையில் இருந்ததையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சோதனை செய்த போது அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. 

இது குறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறுகையில், மதுக்கடை வேண்டும் என ஆளும் கட்சியினர் குடிமகன்களை திரட்டி போராட்டம் மேற்கொண்டனர். அந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு இலவசமாக மது வழங்கினர். அவர்கள் அளித்த இலவச மதுவால் தான் ஆறுமுகம் இறந்துவிட்டார் என்றனர்.

மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் கிராமத்தில் மது குடித்து ஒருவர் உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...