கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. எனவே, எப்போதும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் நிறைந்தே காணப்படும்.
இந்த நிலையில், இன்று கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள முக்கிய பகுதியான கவுண்டம்பாளையத்தில் இருந்து சாய்பாபா கோவில் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மிக நீண்ட தூரத்திற்கு நின்றுகொண்டிருக்கின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.