நீலகிரியில் தீபாவளி கதர் ஆடைகளின் தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

நாட்டின் விடுதலைக்காகவும் தன்னிகரற்ற முன்னேற்றத்திற்காகவும் தனது வாழ்க்கையினை முழுமையாக அர்ப்பணித்த மகாத்மாவின் நினைவுகளை போற்றும் வகையில் ஒவ்வொரும் ஆண்டும் அக்டோபர் 2-ம் தேதி அண்ணல் காந்தியடிகளின் பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

கதர் ஆடைகளை இந்தியா முழுவதும் பரவச் செய்த பெருமையை பெற்ற அவரது பிறந்த நாளில், கதர் மற்றும் கிராமத் தொழில்களின் மூலமாக  பலகோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில் உதகை மாவட்டத்திற்கு 2017-18-ம் ஆண்டிற்கு ரூ.62 இலட்சம் கதர் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல, இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடியினை அரசு அறிவித்துள்ளது. 

  • கதர் - 30 சதவீதம்
  • பட்டு - 30 சதவீதம்
  • பாலியஸ்டர் - 30 சதவீதம்
  • உல்லன் - 30 சதவீதம்


இதனிடையே, உதகை சேரிங்கிராஸில் அண்ணல் காந்தியடிகள் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று (02.10.2017) அவரது திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை காதி அங்காடியில் தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடியின் முதல் விற்பனையையும் அவர் தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் அர்ஜினன், உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...