சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் கடந்த சில நாட்களாக குடல் இறக்கம் நோயால் அவதியுற்று வருகிறார்.
இதனைத்தொடர்ந்து, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த கோவிந்தராஜ், தனக்கு அரசு மருத்துவமனை ஊழியர்கள் முறையான சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளகளிடம் அவர் கூறியதாவது:-
எனது சொந்த ஊர் சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் கிராமம். அங்கு இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து சேர சுமார் 8 மணி நேரம் ஆகிறது.
குடல் இறக்கம் நோயால் பாதிக்கப்பட்ட எனக்கு இரத்தம் மற்றும் சிறுநீரக பரிசோதனை செய்ய வேண்டும் என அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன் பேரில், மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் ஆய்வகத்திற்கு சென்றேன். கடந்த இரு தினங்களாக தினமும் ஆய்வகத்திற்கு செல்கிறேன். நான் செல்லும் நேரத்தில் ஆய்வகத்தில் ஆட்கள் இல்லை எனவும், நாளை வர வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

விவசாய கூலியான என்னை தினமும் அலைக்கழிப்பதால் அன்றாட வாழ்வாதாரத்தை பறிகொடுப்பதோடு, உடல் நிலையும் மிகவும் மோசமாகி வருகிறது.
மருத்துவ அதிகாரிகள் இந்த பிரச்சனையில் தலையிட்டு எனக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த கோவிந்தராஜ், தனக்கு அரசு மருத்துவமனை ஊழியர்கள் முறையான சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளகளிடம் அவர் கூறியதாவது:-
எனது சொந்த ஊர் சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் கிராமம். அங்கு இருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு வந்து சேர சுமார் 8 மணி நேரம் ஆகிறது.
குடல் இறக்கம் நோயால் பாதிக்கப்பட்ட எனக்கு இரத்தம் மற்றும் சிறுநீரக பரிசோதனை செய்ய வேண்டும் என அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன் பேரில், மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் ஆய்வகத்திற்கு சென்றேன். கடந்த இரு தினங்களாக தினமும் ஆய்வகத்திற்கு செல்கிறேன். நான் செல்லும் நேரத்தில் ஆய்வகத்தில் ஆட்கள் இல்லை எனவும், நாளை வர வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

விவசாய கூலியான என்னை தினமும் அலைக்கழிப்பதால் அன்றாட வாழ்வாதாரத்தை பறிகொடுப்பதோடு, உடல் நிலையும் மிகவும் மோசமாகி வருகிறது.
மருத்துவ அதிகாரிகள் இந்த பிரச்சனையில் தலையிட்டு எனக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.