கோவையில் புறா பந்தைய வீரர்கள் இன்று புறா பந்தயத்தில் ஈடுபட்டனர். இதில் கோவையில் இருந்து நூற்றுக்கணக்கான புறாக்கள் பங்கேற்றன.

கோவை ஆவாரம்பாளையத்தில் வருடத்திற்கு ஒரு முறை புறாக்கள் பறக்கவிடும் போட்டி நடைபெறும். இதில் கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பங்கேற்பாளர்கள் பங்கேற்பர்.

அதன்படி, இந்த ஆண்டும் போட்டி இன்று காலை நடைபெற்றது. இதில் 245 புறா கலைஞர்கள் தங்களது புறாக்களுடன் பங்கேற்றனர்.
இப்போட்டியில் கர்ண புறா, சிவப்பு கண் புறா என இரு வகையான புறாக்கள் பங்கேற்றன. இந்த புறாக்கள் எவ்வளவு தூரம் பறக்கின்றன, எத்தனை முறை பறந்தபடியே பல்டி அடிக்கின்றன என்பது குறித்து கணக்கிட்டு பரிசு வழங்கப்படும்.

இது குறித்து புறாக் கலைஞர்கள் தெரிவிக்கையில், புறாக்களுக்கு எவ்வித துன்புறுத்தலும் இல்லாமல் நடக்கும் இப்போட்டியை அடுத்த ஆண்டு முதல் மாநில அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

கோவை ஆவாரம்பாளையத்தில் வருடத்திற்கு ஒரு முறை புறாக்கள் பறக்கவிடும் போட்டி நடைபெறும். இதில் கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பங்கேற்பாளர்கள் பங்கேற்பர்.

அதன்படி, இந்த ஆண்டும் போட்டி இன்று காலை நடைபெற்றது. இதில் 245 புறா கலைஞர்கள் தங்களது புறாக்களுடன் பங்கேற்றனர்.
இப்போட்டியில் கர்ண புறா, சிவப்பு கண் புறா என இரு வகையான புறாக்கள் பங்கேற்றன. இந்த புறாக்கள் எவ்வளவு தூரம் பறக்கின்றன, எத்தனை முறை பறந்தபடியே பல்டி அடிக்கின்றன என்பது குறித்து கணக்கிட்டு பரிசு வழங்கப்படும்.

இது குறித்து புறாக் கலைஞர்கள் தெரிவிக்கையில், புறாக்களுக்கு எவ்வித துன்புறுத்தலும் இல்லாமல் நடக்கும் இப்போட்டியை அடுத்த ஆண்டு முதல் மாநில அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.