கோவையில் புறா பறக்கவிடும் போட்டியில் சீறிப்பாய்ந்த புறாக்கள்

கோவையில் புறா பந்தைய வீரர்கள் இன்று புறா பந்தயத்தில் ஈடுபட்டனர். இதில் கோவையில் இருந்து நூற்றுக்கணக்கான புறாக்கள் பங்கேற்றன.



கோவை ஆவாரம்பாளையத்தில் வருடத்திற்கு ஒரு முறை புறாக்கள் பறக்கவிடும் போட்டி நடைபெறும். இதில் கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பங்கேற்பாளர்கள் பங்கேற்பர்.



அதன்படி, இந்த ஆண்டும் போட்டி இன்று காலை நடைபெற்றது. இதில் 245 புறா கலைஞர்கள் தங்களது புறாக்களுடன் பங்கேற்றனர்.

இப்போட்டியில் கர்ண புறா, சிவப்பு கண் புறா என இரு வகையான புறாக்கள் பங்கேற்றன. இந்த புறாக்கள் எவ்வளவு தூரம் பறக்கின்றன, எத்தனை முறை பறந்தபடியே பல்டி அடிக்கின்றன என்பது குறித்து கணக்கிட்டு பரிசு வழங்கப்படும்.



இது குறித்து புறாக் கலைஞர்கள் தெரிவிக்கையில், புறாக்களுக்கு எவ்வித துன்புறுத்தலும் இல்லாமல் நடக்கும் இப்போட்டியை அடுத்த ஆண்டு முதல் மாநில அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...