கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்

கோவை ராஜ வீதியில் உள்ள ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் பராக்கத்தி ஊர்வலம் நாளை அதிகாலை முதல் நடைபெற உள்ளதால் நகரில் போக்குவரத்து மாற்றத்தை போலீசார் அறிவித்துள்ளனர். 

இது தொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-​

முதலாவது ஊர்வலம் காலை 5.30 மணிக்கு ராமச்சந்திரா ரோட்டில் புறப்படும் போது சுக்கவார்பேட்டையில் இருந்து பூமார்க்கெட் நோக்கி வரக்கூடிய அனைத்து வாகனங்களும் காந்திபார்க் டி.பி. சாலை வழியாக மேட்டுப்பாளையம் சாலை சென்று செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

ஊர்வலம் சுக்கவார்பேட்டை அடையும் போது பழைய மேம்பாலத்தில் இருந்து சுக்கவார்பேட்டை நோக்கி வரக்கூடிய அனைத்து வாகனங்களும் மரக்கடை சந்திப்பில் இருந்து இடதுபுறம் திரும்பி டவுன்ஹால் வைசியாள் வீதி வழியாக காந்திபார்க் சென்று செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

பேரூர் செல்வபுரத்தில் இருந்து செட்டி வீதி, ராஜவீதி வரக்கூடிய அனைத்து வாகனங்களும் சிவாலயா சந்திப்பு மற்றும் செல்வபுரம் உயர்நிலைப் பள்ளி சாலையில் வலதுபுறம் திரும்பி உக்கடம் பைபாஸ் வழியாக உக்கடம் வந்து பைபாஸ் சுங்கம் வந்து வெஸ்ட் கிளப் சாலை வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். 

உக்கடத்தில் இருந்து ஒப்பணக்கார வீதி நோக்கி வரக்கூடிய அனைத்து வாகனங்களும் சுங்கம் பைபாஸ் வழியாக கிளாசிக் டவர் வந்து ரயில்வே நிலையம் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

2-வது ஊர்வலம் மேட்டுப்பாளையம் சாலை அழகேசன் சாலையை அடையும் போது என்.எஸ்.ஆர் சாலை மற்றும் ஏ.ஆர்.சி. சந்திப்பில் இருந்து வடகோவை நோக்கி வரக்கூடிய அனைத்து வாகனங்களும் ஏ.ஆர்.சி. சந்திப்பிலிருந்து சிவனாந்த காலனி சென்று செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

பூமார்க்கெட்டில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் அவினாசிலிங்கம் கல்லூரி சாலையில் இடதுபுறம் திரும்பி பாரதிபார்க் சாலை 4.என்.எஸ்.ஆர் சாலை வழியாக மேட்டுப்பாளையம் சாலை செல்லலாம்.

ஊர்வலம் ஆர்.ஜி. வீதியை அடையும் போது சுக்கரவார்பேட்டையில் இருந்து பூமார்க்கெட் நோக்கி செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும சுக்கரவார்பேட்டை சந்திப்பில் இருந்து காந்திபார்க் டி.பி..சாலை கௌலிபிரவுன் சாலை வழியாக மேட்டுப்பாளையம் சாலை சென்று செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். 

ஊர்வலம் விசிவி சாலையில் வரும் போது புருக்பாண்டு சாலையில் இருந்து தேவங்கபேட்டை சாலை வழியாக வரும் அனைத்து வாகனங்களும் வலதுபுறம் திரும்பாமல் நேராக புருக்பாண்டு சாலையில் சென்று பழைய மேம்பாலம் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

 

மேற்படி, போக்குவரத்து மாற்றத்திற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தருமாறு கோவை மாநகர காவல் ஆணையர் கேட்டுக் கொண்டார். 

Newsletter

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...