கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்

கோவை ராஜ வீதியில் உள்ள ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் பராக்கத்தி ஊர்வலம் நாளை அதிகாலை முதல் நடைபெற உள்ளதால் நகரில் போக்குவரத்து மாற்றத்தை போலீசார் அறிவித்துள்ளனர். 

இது தொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-​

முதலாவது ஊர்வலம் காலை 5.30 மணிக்கு ராமச்சந்திரா ரோட்டில் புறப்படும் போது சுக்கவார்பேட்டையில் இருந்து பூமார்க்கெட் நோக்கி வரக்கூடிய அனைத்து வாகனங்களும் காந்திபார்க் டி.பி. சாலை வழியாக மேட்டுப்பாளையம் சாலை சென்று செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

ஊர்வலம் சுக்கவார்பேட்டை அடையும் போது பழைய மேம்பாலத்தில் இருந்து சுக்கவார்பேட்டை நோக்கி வரக்கூடிய அனைத்து வாகனங்களும் மரக்கடை சந்திப்பில் இருந்து இடதுபுறம் திரும்பி டவுன்ஹால் வைசியாள் வீதி வழியாக காந்திபார்க் சென்று செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

பேரூர் செல்வபுரத்தில் இருந்து செட்டி வீதி, ராஜவீதி வரக்கூடிய அனைத்து வாகனங்களும் சிவாலயா சந்திப்பு மற்றும் செல்வபுரம் உயர்நிலைப் பள்ளி சாலையில் வலதுபுறம் திரும்பி உக்கடம் பைபாஸ் வழியாக உக்கடம் வந்து பைபாஸ் சுங்கம் வந்து வெஸ்ட் கிளப் சாலை வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். 

உக்கடத்தில் இருந்து ஒப்பணக்கார வீதி நோக்கி வரக்கூடிய அனைத்து வாகனங்களும் சுங்கம் பைபாஸ் வழியாக கிளாசிக் டவர் வந்து ரயில்வே நிலையம் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

2-வது ஊர்வலம் மேட்டுப்பாளையம் சாலை அழகேசன் சாலையை அடையும் போது என்.எஸ்.ஆர் சாலை மற்றும் ஏ.ஆர்.சி. சந்திப்பில் இருந்து வடகோவை நோக்கி வரக்கூடிய அனைத்து வாகனங்களும் ஏ.ஆர்.சி. சந்திப்பிலிருந்து சிவனாந்த காலனி சென்று செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

பூமார்க்கெட்டில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் அவினாசிலிங்கம் கல்லூரி சாலையில் இடதுபுறம் திரும்பி பாரதிபார்க் சாலை 4.என்.எஸ்.ஆர் சாலை வழியாக மேட்டுப்பாளையம் சாலை செல்லலாம்.

ஊர்வலம் ஆர்.ஜி. வீதியை அடையும் போது சுக்கரவார்பேட்டையில் இருந்து பூமார்க்கெட் நோக்கி செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும சுக்கரவார்பேட்டை சந்திப்பில் இருந்து காந்திபார்க் டி.பி..சாலை கௌலிபிரவுன் சாலை வழியாக மேட்டுப்பாளையம் சாலை சென்று செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். 

ஊர்வலம் விசிவி சாலையில் வரும் போது புருக்பாண்டு சாலையில் இருந்து தேவங்கபேட்டை சாலை வழியாக வரும் அனைத்து வாகனங்களும் வலதுபுறம் திரும்பாமல் நேராக புருக்பாண்டு சாலையில் சென்று பழைய மேம்பாலம் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

 

மேற்படி, போக்குவரத்து மாற்றத்திற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தருமாறு கோவை மாநகர காவல் ஆணையர் கேட்டுக் கொண்டார். 

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...