கோவை மாவட்டம், சூலூர் அருகே செங்கத்துறை பகுதியில் டாஸ்மாக் கடையினை மூட எதிர்ப்பு தெரிவித்தும், தொடர்ந்து டாஸ்மாக் கடையினை நடத்த வலியுறுத்தியும் மதுபிரியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே செங்கத்துறை பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி, அதனை அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், டாஸ்மாக் கடைக்கு ஆதரவாக அப்பகுதியைச் சேர்ந்த மது பிரியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், டாஸ்மாக் கடை மூடப்பட்டால் கூலி தொழிலாளர்கள் அதிக விலை கொடுத்து கள்ள சந்தையில் மது வாங்கி குடிக்க நேரிடும் எனவும், அதேசமயம் டாஸ்மாக் கடையைத் தேடி பல கிலோமீட்டர் சுற்றி வேறு பகுதிக்கு சென்றால் விபத்துகள் நேரிடும் எனவும் மதுபிரியர்கள் தெரிவித்தனர்.
மேலும், செங்கத்துறை பகுதியில் டாஸ்மாக் கடையினை மூட எதிர்ப்பு தெரிவித்த மதுபிரியர்கள், தொடர்ந்து டாஸ்மாக் கடையினை நடத்த வலியுறுத்தினர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே செங்கத்துறை பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி, அதனை அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், டாஸ்மாக் கடைக்கு ஆதரவாக அப்பகுதியைச் சேர்ந்த மது பிரியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், டாஸ்மாக் கடை மூடப்பட்டால் கூலி தொழிலாளர்கள் அதிக விலை கொடுத்து கள்ள சந்தையில் மது வாங்கி குடிக்க நேரிடும் எனவும், அதேசமயம் டாஸ்மாக் கடையைத் தேடி பல கிலோமீட்டர் சுற்றி வேறு பகுதிக்கு சென்றால் விபத்துகள் நேரிடும் எனவும் மதுபிரியர்கள் தெரிவித்தனர்.
மேலும், செங்கத்துறை பகுதியில் டாஸ்மாக் கடையினை மூட எதிர்ப்பு தெரிவித்த மதுபிரியர்கள், தொடர்ந்து டாஸ்மாக் கடையினை நடத்த வலியுறுத்தினர்.