சூலூர் அருகே மதுக்கடையை மூட எதிர்ப்பு தெரிவித்து மதுபிரியர்கள் ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், சூலூர் அருகே செங்கத்துறை பகுதியில் டாஸ்மாக் கடையினை மூட எதிர்ப்பு தெரிவித்தும், தொடர்ந்து டாஸ்மாக் கடையினை நடத்த வலியுறுத்தியும் மதுபிரியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்டம் சூலூர் அருகே செங்கத்துறை பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி, அதனை அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டாஸ்மாக் கடைக்கு ஆதரவாக அப்பகுதியைச் சேர்ந்த மது பிரியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், டாஸ்மாக் கடை மூடப்பட்டால் கூலி தொழிலாளர்கள் அதிக விலை கொடுத்து கள்ள சந்தையில் மது வாங்கி குடிக்க நேரிடும் எனவும், அதேசமயம் டாஸ்மாக் கடையைத் தேடி பல கிலோமீட்டர் சுற்றி வேறு பகுதிக்கு சென்றால் விபத்துகள் நேரிடும் எனவும் மதுபிரியர்கள் தெரிவித்தனர்.

மேலும், செங்கத்துறை பகுதியில் டாஸ்மாக் கடையினை மூட எதிர்ப்பு தெரிவித்த மதுபிரியர்கள், தொடர்ந்து டாஸ்மாக் கடையினை நடத்த வலியுறுத்தினர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...