இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு


கோவை மாவட்டம் சூலூர் அருகே கடந்த 2014ஆம் ஆண்டு கூலிப்படையைச் சேர்ந்த மர்ம நபர்கள் ராக்கியப்பன் என்பவரது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில், தந்தை ராக்கியப்பன் மற்றும் வினோதி ஆகிய இருவர் உயிரிழந்தனர்.

மேலும், ராக்கியப்பனின் மனைவி சரோஜினி மற்றும் அவரது மகள் யசோதா ஆகிய இருவர் காயமடைந்தனர்.

இதுகுறித்து, சரோஜினி அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த உதயகுமார் என்கிற குமார் (19), பரமசிவம் என்கிற சிவம் (23) மற்றும் சையது அப்துல் காதர் (29) ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்திய கோவை நீதிமன்றம் மேற்குறிப்பிட்ட மூன்று பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...