தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்



கோவை மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் நேற்று (27.09.2017) மாலை 4.00 மணிக்கு வடகோவை கிராஸ் கட் சாலையில் உள்ள கோவை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட அவைத் தலைவர் வெ. நா. பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ சிறப்புரையாற்றினார். பின்னர், செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



அதில், வருகின்ற (01.10.2017) ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி அளவில் பீளமேடு விமான நிலையத்திற்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி செயல் தலைவர் மு.க ஸ்டாலின் வருகை தர உள்ளதை மாநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாபெரும் வரவேற்பினை அளிப்பதற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் அனைவரும் பெரும் திரளாக பங்கேற்று வரவேற்பு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், திண்டுக்கல்லில் செப்டம்பர் 16 ம் தேதி அன்று நடைபெற்ற முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் செயல்தலைவர் மு.க ஸ்டாலின் அறிவிப்பிற்கிணங்க, கோவை மாநகர் தெற்கு மாவட்ட கழகம் கழக நிர்வாகிகள் வீடு வீடாக சென்று லட்சக்கணக்கிலே கழகத்திற்கு உறுப்பினர்களை சேர்த்து கழகம் வலுப்பெறுவதற்கு முனைப்புடன் செயல்படவும் முடிவு செய்யப்பட்டது.

கோவை மாநகராட்சியில் மக்களை பாதிக்கின்ற வகையில் அறிவித்திருக்கின்ற புதிய வரி விதிப்பு , குப்பைகளுக்கு வரி , குடிநீர் இணைப்புக்கு வைப்புத் தொகை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டங்கள், அனைத்திலும் சிறப்பாக பங்கேற்ற மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிக் கழக செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர் அனைவருக்கும் திமுக சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



இக்கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள் சிங்கை ஆர்.ரவிச்சந்திரன், சாந்தி , தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி. சுப்ரமணியம் , பொதுக்குழு உறுப்பினர் ஜஹாங்கீர், கதிர்வேல்சாமி, உமா மகேஸ்வரி, பகுதிக் கழக செயலாளர்கள் கே.எம். சுந்தரம், சா.மாணிக்கம், எஸ்.எம்.சாமி, மாவட்ட அமைப்பாளர்கள் இளஞ்சேரன், தளபதி இளங்கோ, பையாக்கவுண்டர், முருகேசன், மாலதி நாகராஜன், மற்றும் வட்டக் கழகச் செயலாளர்கள், பகுதிக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக முன்னணியினர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...