சொத்துவரி உயர்வு என தவறுதலாக சித்தரிக்கப்படுவதை நம்பவேண்டாம்- கோவை மாநகராட்சி ஆணையர்


கோவை மாநகராட்சியில் உபயோக மாற்றம் செய்யப்பட்ட கட்டிடங்கள், விடுபட்ட கட்டிடங்கள் மற்றும் விதிகளின்படி கட்டிடத்தின் முழு பரப்பளவிற்கு வரிவிதிப்பு செய்யப்படாத இனங்களுக்கு விதிகளின்படி சொத்துவரி நிர்ணயம் செய்யப்படுகிறது. இதைத் தவிர சொத்துவரி உயர்வு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், சொத்துவரி உயர்வு என தவறுதலாக சித்தரிக்கப்படுவதை நம்பவேண்டாம் எனவும் கோவை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவை மாநகராட்சியில் ரூ.159.85 கோடி மதிப்பீட்டில் பில்லூர் 2-ம் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு முழுமையாக முடிக்கப்பெற்று மாநகர மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் மாமன்ற தீர்மானங்களின் படி திருத்திய குடிநீர் கட்டணம், கூடுதல் வைப்புத்தொகை ஆகியவற்றை உள்ளடக்கிய குடிநீர் விநியோக துணை விதிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி திருத்தப்பட்ட வைப்புத் தொகைகள் வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும். இக்கட்டணங்கள் வசூலிக்கப்படாத காரணத்தினால் தணிக்கை தடை எழுப்பப்பட்டுள்ளது. மேலும், இணைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் குறிச்சி, குனியமுத்தூர், கவுண்டம்பாளையம் மற்றும் வடவள்ளி பகுதிகளில் ஏற்கனவே வசூல்செய்யப்பட்டு வரும் வைப்புத்தொகை தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விகிதத்தில் உள்ளதால் இப்பகுதிகளில் உள்ள குடிநீர் இணைப்புதாரர்கள் இத்தொகையினை செலுத்த தேவையில்லை.

மேலும், 01.10.2013-க்குப் பின்னர் பெற்றுள்ள குடிநீர் இணைப்புகளுக்கு புதிய விகிதத்தில் வைப்புத்தொகைகள் வசூலிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

ஆகவே, 01.10.2013-க்கு முன்னர் உள்ள இணைப்புகளுக்கு மட்டும் திருத்தப்பட்ட வைப்புத்தொகை செலுத்தக் கோரி அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளது.

பொதுமக்கள் திருத்தப்பட்ட வைப்புத் தொகையினை மாநகராட்சிக்கு தவறாமல் செலுத்தி, மாநகராட்சியின் குடிநீர் வளர்ச்சி திட்டங்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...