சொத்துவரி உயர்வு என தவறுதலாக சித்தரிக்கப்படுவதை நம்பவேண்டாம்- கோவை மாநகராட்சி ஆணையர்


கோவை மாநகராட்சியில் உபயோக மாற்றம் செய்யப்பட்ட கட்டிடங்கள், விடுபட்ட கட்டிடங்கள் மற்றும் விதிகளின்படி கட்டிடத்தின் முழு பரப்பளவிற்கு வரிவிதிப்பு செய்யப்படாத இனங்களுக்கு விதிகளின்படி சொத்துவரி நிர்ணயம் செய்யப்படுகிறது. இதைத் தவிர சொத்துவரி உயர்வு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், சொத்துவரி உயர்வு என தவறுதலாக சித்தரிக்கப்படுவதை நம்பவேண்டாம் எனவும் கோவை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவை மாநகராட்சியில் ரூ.159.85 கோடி மதிப்பீட்டில் பில்லூர் 2-ம் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு முழுமையாக முடிக்கப்பெற்று மாநகர மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் மாமன்ற தீர்மானங்களின் படி திருத்திய குடிநீர் கட்டணம், கூடுதல் வைப்புத்தொகை ஆகியவற்றை உள்ளடக்கிய குடிநீர் விநியோக துணை விதிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி திருத்தப்பட்ட வைப்புத் தொகைகள் வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும். இக்கட்டணங்கள் வசூலிக்கப்படாத காரணத்தினால் தணிக்கை தடை எழுப்பப்பட்டுள்ளது. மேலும், இணைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் குறிச்சி, குனியமுத்தூர், கவுண்டம்பாளையம் மற்றும் வடவள்ளி பகுதிகளில் ஏற்கனவே வசூல்செய்யப்பட்டு வரும் வைப்புத்தொகை தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விகிதத்தில் உள்ளதால் இப்பகுதிகளில் உள்ள குடிநீர் இணைப்புதாரர்கள் இத்தொகையினை செலுத்த தேவையில்லை.

மேலும், 01.10.2013-க்குப் பின்னர் பெற்றுள்ள குடிநீர் இணைப்புகளுக்கு புதிய விகிதத்தில் வைப்புத்தொகைகள் வசூலிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.

ஆகவே, 01.10.2013-க்கு முன்னர் உள்ள இணைப்புகளுக்கு மட்டும் திருத்தப்பட்ட வைப்புத்தொகை செலுத்தக் கோரி அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளது.

பொதுமக்கள் திருத்தப்பட்ட வைப்புத் தொகையினை மாநகராட்சிக்கு தவறாமல் செலுத்தி, மாநகராட்சியின் குடிநீர் வளர்ச்சி திட்டங்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...