வளமான குழந்தைகளை உருவாக்கி நலமான சமுதாயத்தை படைக்கும் முயற்சி

கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கிய அறம் அறக்கட்டளை தொண்டு நிறுவனம், சாதாரண மனிதனின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. குழந்தைகள்தான் சமுதாயத்தை மாற்றியமைக்கக் கூடியவர்கள், எனவே, வளமான குழந்தைகளே நலமான சமூகமாகும்.

குழந்தைகளின் வாழ்க்கையில் கல்வியே மூலதனமாகும். ஒவ்வொரு குழந்தைகளிடம் இருக்கும் திறமைகளை, ஏற்ற சுற்றுச்சூழல், சரியாக வழிநடத்துதல், சுதந்திரமாக செயல்பட விடுதல் ஆகியவற்றின் மூலம் வெளிக் கொண்டுவருவதால், அவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றி கிடைக்கிறது. இந்த வெற்றிகளின் காரணமாக இறுதியில் நல்ல குடிமகன் உருவாகின்றான். இதன் மூலம் புதிய சமுதாயம் பிறக்கிறது. 

கோவையில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் கடந்த ஆறு மாதங்களாக நடத்தப்பட்ட ஆய்வில், பல்வேறு வலுவான உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, கல்வியாளர்கள், நரம்பியல் உளவியலாளர்கள், ஆலோசகர்கள், வழிகாட்டிகள், ஊக்குவிப்பாளர்கள், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், டி.ஆர்.ஓ., பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆலோசனை நடத்தினர். 

இதைத் தொடர்ந்து, ”மகிழ்ச்சியான குழந்தைகள் என்ற திட்டம்”  நிர்வாக இயக்குநர் லதா சுந்தரம் தலைமையில் உருவாக்கப்பட்டது. 

தொடங்கப்பட்ட ஆண்டு : 2012, அக்டோபர்

இதுவரை பயனடைந்தவர்கள் : 67,650 மாணவர்கள்

முடிவுகள் : பல குழந்தைகளின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதால் மகிழ்ச்சி உருவாகிறது. பள்ளிகளில் இனிமையான சுற்றுச்சூழல் மற்றும் குழந்தைகளில் நடவடிக்கைளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 6,500 குழந்தைகளின் சுயமதிப்பீட்டை அளவிடும் சிறுபுத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.  ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்டவர்களின் நல்ல கருத்துகள் கிடைத்துள்ளது. 



இந்த ஆண்டு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 11,500 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலைக் கல்லூரியில் சுமார் 200-க்கும் பயிற்சியாளர்கள், பெண்களின் அதிகாரம் குறித்து நிகழ்ச்சி இன்று (27.09.2017) நடந்தது. இதில், குழந்தைகளின் மனநிலை, மாணவர்களின் சுயமதிப்பு, பயிற்சியாளர்கள் பின்பற்ற வேண்டிய, பின்பற்றக் கூடாத நடவடிக்கைகள் உள்பட 20 விதமான பயிற்சிகள் அளிக்கப்பட்டது.  பின்னர், இந்த நிகழ்ச்சியில் சுய மதிப்பீட்டு புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.  



Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...