தேர்தல் ஆவணங்களில் ஜெயலலிதாவின் கைரேகை விவகாரம் - தேர்தல் ஆணைய செயலர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, ஒத்திவைக்கப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி தேர்தலுடன் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலும் நடந்தது. அப்போது, அதிமுக பொதுச்செயலர் என்ற வகையில், வேட்பாளர்களுக்கான விண்ணப்ப படிவத்தில் அரசு மருத்துவர்கள் முன்னிலையில், ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டதாகக் கூறப்பட்டது. 

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதியில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் சரவணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வேட்பாளர் போஸ் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். மேலும், அவர், போஸ் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகவும், வேட்பு மனு தாக்கலின் போது அளித்த விண்ணப்பப் படிவத்தில் ஜெயலலிதா வைத்திருந்த கைரேகை உண்மை தன்மையை ஆராய வேண்டும் எனக் கூறியிருந்தார். 

இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக தேர்தல் அதிகாரி லக்கானி, திருப்பரங்குன்றம் தேர்தல் அதிகாரி ஆகியோரை விளக்கமளிக்க உத்தரவிட்டது. அதன்படி தேர்தல் அதிகாரி லக்கானி கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். இன்று, திருப்பரங்குன்றம் தேர்தல் அதிகாரி உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவர், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் அதிமுக வேட்பாளரின் விண்ணப்பப் படிவம் ஏற்று கொண்டதாக கூறினார்.

இதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலர் வரும் அக்டோபர் 6ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...