கோவையில் செயல்படும் மத்திய அரசின் அச்சகத்தை மூடுவதற்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சியால் தமிழகம் வஞ்சிக்கப்பட உள்ளதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடந்த 1964-ம் ஆண்டு காமராசர் ஆட்சியின் போது மத்திய அரசின் அச்சகம் போராடி கோவை மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சியில் நிறுவப்பட்டது. இதில் 70 பேர் தற்போது பணி செய்து வருகின்றனர். இந்த தொழிலை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாகவும், பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் மறைமுகமாகவும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்தியா முழுவதிலும் இது போல் 17 அச்சகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் தென்னிந்தியாவில் உள்ள 6 அச்சகங்களை முழுவதுமாக மூடிவிட்டு அதனை வட மாநிலங்களில் உள்ள அச்சகங்களோடு இணைத்து அவற்றை நவீனப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதற்காக, தமிழகம், கேரளாவில் உள்ள அச்சகங்க நிலங்களை விற்கவும், கர்நாடகத்தில் உள்ள அச்சக நிலத்தை அம்மாநில அரசிடம் ஒப்படைப்பதாகவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தென்னிந்தியாவித்கு ஒரு அச்சகத்தை கூட விட்டு வைக்காமல், வட இந்திய அச்சகங்களை நவீனப்படுத்த நினைப்பதிலேயே தமிழகம் வஞ்சிக்கப்படுவது உண்மை என புலப்படுகிறது. உடனடியாக இந்த முடிவு கைவிடப்பட வேண்டும். இது தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களிடம் பேசி போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடந்த 1964-ம் ஆண்டு காமராசர் ஆட்சியின் போது மத்திய அரசின் அச்சகம் போராடி கோவை மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சியில் நிறுவப்பட்டது. இதில் 70 பேர் தற்போது பணி செய்து வருகின்றனர். இந்த தொழிலை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாகவும், பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் மறைமுகமாகவும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்தியா முழுவதிலும் இது போல் 17 அச்சகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் தென்னிந்தியாவில் உள்ள 6 அச்சகங்களை முழுவதுமாக மூடிவிட்டு அதனை வட மாநிலங்களில் உள்ள அச்சகங்களோடு இணைத்து அவற்றை நவீனப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதற்காக, தமிழகம், கேரளாவில் உள்ள அச்சகங்க நிலங்களை விற்கவும், கர்நாடகத்தில் உள்ள அச்சக நிலத்தை அம்மாநில அரசிடம் ஒப்படைப்பதாகவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தென்னிந்தியாவித்கு ஒரு அச்சகத்தை கூட விட்டு வைக்காமல், வட இந்திய அச்சகங்களை நவீனப்படுத்த நினைப்பதிலேயே தமிழகம் வஞ்சிக்கப்படுவது உண்மை என புலப்படுகிறது. உடனடியாக இந்த முடிவு கைவிடப்பட வேண்டும். இது தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களிடம் பேசி போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.