கோவையில் செயல்படும் மத்திய அரசு அச்சகத்தை மூடும் முயற்சியில் தமிழகம் வஞ்சிக்கப்பட உள்ளது - கு.இராமகிருட்டிணன்

கோவையில் செயல்படும் மத்திய அரசின் அச்சகத்தை மூடுவதற்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சியால் தமிழகம்  வஞ்சிக்கப்பட உள்ளதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 



கடந்த 1964-ம் ஆண்டு காமராசர் ஆட்சியின் போது மத்திய அரசின் அச்சகம் போராடி கோவை மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சியில் நிறுவப்பட்டது. இதில் 70 பேர் தற்போது பணி செய்து வருகின்றனர். இந்த தொழிலை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாகவும், பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் மறைமுகமாகவும் வாழ்ந்து வருகின்றனர்.



இந்தியா முழுவதிலும் இது போல் 17 அச்சகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் தென்னிந்தியாவில் உள்ள 6 அச்சகங்களை முழுவதுமாக மூடிவிட்டு அதனை வட மாநிலங்களில் உள்ள அச்சகங்களோடு இணைத்து அவற்றை நவீனப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

அதற்காக, தமிழகம், கேரளாவில் உள்ள அச்சகங்க நிலங்களை விற்கவும், கர்நாடகத்தில் உள்ள அச்சக நிலத்தை அம்மாநில அரசிடம் ஒப்படைப்பதாகவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.



தென்னிந்தியாவித்கு ஒரு அச்சகத்தை கூட விட்டு வைக்காமல், வட இந்திய அச்சகங்களை நவீனப்படுத்த நினைப்பதிலேயே தமிழகம் வஞ்சிக்கப்படுவது உண்மை என புலப்படுகிறது. உடனடியாக இந்த முடிவு கைவிடப்பட வேண்டும். இது தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களிடம் பேசி போராட்டம் நடத்த உள்ளோம். 

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...