பசும் பால் லிட்டருக்கு ரூ.35 வழங்க வேண்டும். ஒரு டன் கரும்புக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொடர்ந்து, சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதிலும் உள்ள கோட்டாட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
விவசாயிகளின் விலை பொருளுக்கு உரிய விலை வழங்குதல், பசும் பால் விலையை 35 ரூபாய்க்கும், எருமை பால் விலை 45 ரூபாய்க்கும் வாங்குதல், கரும்பு டன் ஒன்றிற்கு ரூ.4000ம் வழங்குதல் மற்றும் மோடி தேர்தல் காலகட்டத்தில் அறிவித்தபடி அனைத்து விவசாய பொருளுக்கும் கூடுதல் விலை வழங்குதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தி வருகிறோம்.

எங்கள் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் மாநில குழு வழிகாட்டுதலின் படி அடுத்த கட்ட போராட்டங்கள் நடத்தப்படும்' என்றார்.
தொடர்ந்து, முற்றுகை போராட்டம் நடத்திய 42 பேரை போலீசார் கைது செய்தனர்.


தொடர்ந்து, சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதிலும் உள்ள கோட்டாட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
விவசாயிகளின் விலை பொருளுக்கு உரிய விலை வழங்குதல், பசும் பால் விலையை 35 ரூபாய்க்கும், எருமை பால் விலை 45 ரூபாய்க்கும் வாங்குதல், கரும்பு டன் ஒன்றிற்கு ரூ.4000ம் வழங்குதல் மற்றும் மோடி தேர்தல் காலகட்டத்தில் அறிவித்தபடி அனைத்து விவசாய பொருளுக்கும் கூடுதல் விலை வழங்குதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தி வருகிறோம்.

எங்கள் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் மாநில குழு வழிகாட்டுதலின் படி அடுத்த கட்ட போராட்டங்கள் நடத்தப்படும்' என்றார்.
தொடர்ந்து, முற்றுகை போராட்டம் நடத்திய 42 பேரை போலீசார் கைது செய்தனர்.
