பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கைது

பசும் பால் லிட்டருக்கு ரூ.35 வழங்க வேண்டும். ஒரு டன் கரும்புக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



தொடர்ந்து, சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதிலும் உள்ள கோட்டாட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. 

விவசாயிகளின் விலை பொருளுக்கு உரிய விலை வழங்குதல், பசும் பால் விலையை 35 ரூபாய்க்கும், எருமை பால் விலை 45 ரூபாய்க்கும் வாங்குதல், கரும்பு டன் ஒன்றிற்கு ரூ.4000ம் வழங்குதல் மற்றும் மோடி தேர்தல் காலகட்டத்தில் அறிவித்தபடி அனைத்து விவசாய பொருளுக்கும் கூடுதல் விலை வழங்குதல் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தி வருகிறோம்.



எங்கள் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் மாநில குழு வழிகாட்டுதலின் படி அடுத்த கட்ட போராட்டங்கள் நடத்தப்படும்' என்றார். 

தொடர்ந்து, முற்றுகை போராட்டம் நடத்திய 42 பேரை போலீசார் கைது செய்தனர்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...