அனைத்து சிறப்பு காவல்படையும் தயார் நிலையில் இருக்க டிஜிபி ராஜேந்திரன் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் தயார் நிலையில் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 19 சிறப்பு காவல்படைக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசாதாரண சம்பவங்கள் எதிர்பார்க்கப்படும் சூழலில் இத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.க்களுக்கு டிஜிபி ராஜேந்திரன் விடுத்துள்ள இந்த உத்தரவால், மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி உயிரிழந்து விட்டதாகவும், இதன் காரணமாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் உஷார் படுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. அதிகளவில் இந்த செய்தியும் பகிரப்பட்டது.
இந்த தகவல்கள் கசியத் தொடங்கிய சில மணி நிமிடங்களிலேயே கருணாநிதியின் மகளும், தி.மு.க. எம்.பியுமான கனிமொழி, தி.மு.க தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார், வதந்திகளை பரப்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிலையில், மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.க்களுக்கு டிஜிபி ராஜேந்திரன் விடுத்துள்ள இந்த உத்தரவால், மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி உயிரிழந்து விட்டதாகவும், இதன் காரணமாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் உஷார் படுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. அதிகளவில் இந்த செய்தியும் பகிரப்பட்டது.
இந்த தகவல்கள் கசியத் தொடங்கிய சில மணி நிமிடங்களிலேயே கருணாநிதியின் மகளும், தி.மு.க. எம்.பியுமான கனிமொழி, தி.மு.க தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார், வதந்திகளை பரப்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.