கோயம்புத்தூர் ரன்னர்ஸ் மற்றும் ஷோ ஸ்பேஸ் ஈவன்ட்ஸ் ஆகியோரின் ஆதரவோடு இந்த மாரத்தான் நிகழ்வை கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷன் இந்நகருக்கு கொண்டு வருகிறது.
இந்நிகழ்வில் பங்கேற்க 13,500-க்கும் மேற்பட்டோர் பதிவுசெய்து ஒரு புதிய உயரத்தை எட்டியிருப்பதால் இந்நிகழ்வின் 5-வது பதிப்பு பெருமை கொள்வதற்கு காரணம் இருக்கிறது. அக்டோபர் 1ஆம் தேதி (ஞாயிறு) நடைபெறவிருக்கின்ற மாரத்தான் ரேஸ் தினத்தன்று வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு வழங்கப்படவுள்ள மெடல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ டீ-சர்ட் இன்று அமைப்பாளர்களால் அறிமுகம் செய்யப்பட்டது.

1991-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதியன்று நிறுவப்பட்டு, இப்போது 26 ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கும் சிசிஎஃப் கோயம்புத்தூரிலுள்ள ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையின் புற்றுநோய் வார்டுகளிலிருந்து செயல்பட்டு வருகிறது. இத்தகைய மாரத்தான் நிகழ்வுகளின் வழியாக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை சிசிஎஃப் அதிகரித்திருக்கிறது. இதுமட்டுமின்றி, வாழ்க்கையின் இறுதிகட்டத்தில் கவனிப்பு மற்றும் வலித்தணிப்பு சேவைகள் துறையில், இறக்கும் தருவாயிலுள்ள நோயாளிகளுக்கு இல்லத்திலேயே பராமரிப்பு சேவையையும் மற்றும் சிகிச்சை அமைவிட வசதியையும் அளிக்கிறது.

தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட தடகள சங்கத்தின் அங்கீகாரம் மற்றும் ஆதரவோடு வோடஃபோன் கோயம்புத்தூர் மாரத்தான் நிகழ்வு நடைபெறுகிறது. 21.1கிமீ ஓட்டம் (பாதி மாரத்தான்), 10கிமீ ஓட்டம் மற்றும் 5கிமீ ஓட்டம், நடை என்ற மூன்று பிரிவுகளாக இந்த மாரத்தான் நடைபெறுகிறது.

ரூ.2.5 லட்சம் என்ற தொகைக்கும் அதிகமான ரொக்கப்பரிசுத்தொகையானது, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியான வகையினங்களில் வெற்றிபெறும் நபர்களுக்கு வழங்கப்படும். மாரத்தான் நிகழ்வு நடைபெறுகின்ற வழித்தடமானது, உதவி மையங்கள், நீர்வழங்கல் முனைகள், மருத்துவ வசதிகள், ஆம்புலன்ஸ் சேவைகள், வழித்தட குறிப்பான்கள், நிகழ்வை நெறிப்படுத்தும் மார்ஷல்கள், ஓட்டங்கள் நிறைவடைகின்ற பகுதியில் சிற்றுண்டிகள் என பல்வேறு வசதிகளைக் கொண்டிருக்கும்.

இந்த மாரத்தான் ரேஸ் இயக்குநரான ரமேஷ் பொன்னுசாமி பேசுகையில், வாழ்க்கையின் அனைத்து நிலைகளைச்சேர்ந்த மக்களை ஒன்றுசேர்த்து, ஒரு உன்னத நோக்கத்திற்காக ஒரு விளையாட்டுத்தளத்தில் ஒருங்கிணைக்கக்கூடிய இதுபோன்ற நிகழ்வு கோயம்புத்தூரில் எதுவுமில்லை. பங்கேற்பாளர்களுக்கு முந்தைய ஆண்டைவிட செயல்திறனையும் மற்றும் ஓட்ட அனுபவத்தையும் மேம்படுத்துவதும், பிற ஓட்டப்பந்த நிகழ்வுகளுக்கு பின்பற்றுவதற்காக அல்லது மாதிரியாக கொண்டிருப்பதற்காக தரஅளவுகளை நிர்ணயிப்பதும் எமது நோக்கமாகும். கோயம்புத்தூர் மாநகருக்கு உலகத்தரத்திலான ஒரு விளையாட்டு நிகழ்வை தொடர்ந்து வழங்குவதும் எமது குறிக்கோளாகும். இவ்வாறு அவர் பேசினார்.