கோவை மாநகராட்சி வரி வசூல் மற்றும் சேவை மையத்தில் தற்பொழுது பயன்படுத்தி வரும் மென்பொருளில் இருந்து புதிய மென்பொருளுக்கு மாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருவதால் வரும் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை வரி வசூல் மற்றும் சேவை மையம் இயங்காது எனவும், அப்டோபர் 4 ஆம் தேதி முதல் வரிவசூல் யைங்கள் வழக்கம் போல் செயல்படும் எனவும் கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் https://tnurbanepay.tn.gov.in மூலம் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் வரியில்லா இனங்களுக்கான தொகைகளை Internet Banking / Debit Card/ Credit Card ஆகியவற்றை பயன்படுத்தி தொகை செலுத்தும் வசதி அக்டோபர் 4 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது என கோவை மாநகராட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் https://tnurbanepay.tn.gov.in மூலம் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் வரியில்லா இனங்களுக்கான தொகைகளை Internet Banking / Debit Card/ Credit Card ஆகியவற்றை பயன்படுத்தி தொகை செலுத்தும் வசதி அக்டோபர் 4 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது என கோவை மாநகராட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.