அஞ்சல் வார விழாவை முன்னிட்டு கோவையில் 5000 மரக்கன்றுகள் நட முடிவு



பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்தை பசுமைமயமாக்கும் முயற்சியில் கோவை அஞ்சல் கோட்டம் 5000 மரக்கன்றுகளை நட முடிவு செய்துள்ளது.

அஞ்சல் வார விழா வரும் அக்டோபர் மாதம் கொண்டாடப்படும் நிலையில் அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டம் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை வரும் அக்டோபர் மாதத்திற்குள் நடுவதற்கு முயற்சி செய்து வருகிறது.

இதனை மாநில அளவில் நடத்துவதற்கு தமிழக முதன்மை அஞ்சல்துறைத் தலைவர் சம்பத் சென்னை கோயம்பேடு அஞ்சலகத்தில் மரக்கன்றுகள் நட்டு துவங்கி வைத்தார்.

தற்போது முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள அஞ்சல் துறைக்கு சொந்தமான காலி இடங்களில் இம்மாத இறுதிக்குள் 50 ஆயிரம் மரக்கன்றுகளை நடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் அனைத்து அஞ்சலகத்தில் உள்ள காலி இடங்கள் விரிவுபடுத்தப்பட்டு ஒரு லட்சம் மரக்கன்றுகளை வரும் அக்டோபர் மாதத்திற்குள் நட்டி இலக்கினை அடைய திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை அஞ்சல் கோட்டத்திற்கு சொந்தமான சர்கார் சாமக்குளம், கோவை பிரஸ் காலனி, எஸ்.எஸ் குளம் மற்றும் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் ஆகிய இடங்கள் விரிவுபடுத்தப்பட்டு அஞ்சல் துறைக்கு சொந்தமான இந்த காலி இடங்களில் மரம் நடப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக கே.கே புதூர் பகுதியில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் கோவை கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சித்ரா தேவி தலைமை தாங்கினார். கோவை முன்னாள் மேயர் வெங்கடாசலம், கவுன்சிலர் காயத்திரி, காவல் ஆய்வாளர் அய்யர்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவை வடக்கு உபகோட்ட உதவி கண்காணிப்பாளர் ஜெயராஜ் பாபு செய்திருந்தார்.

பின்னர், விழாவில் பேசிய கோவை கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் சித்ரா தேவி, கோவை அஞ்சல் கோட்டத்திற்கு மட்டும் 5 ஆயிரம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும், தற்போது இண்டஸ்ரியல் எஸ்டேட், பிரஸ் காலனி, எஸ்.எஸ் குளம் மற்றும் சர்க்கார் சாமக்குளத்தில் உள்ள அஞ்சல் துறைக்கு சொந்தமான இடங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு முடிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இத்திட்டம் அடுத்த கட்டமாக கோவை அஞ்சல் கோட்டத்திற்கு சொந்தமான மீதமுள்ள 8 இடங்களில் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...