மாநகராட்சி ஆணையர் தலைமையில் குடிநீர் சீராக விநியோகிப்பது குறித்து ஆலோசனை

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி, கோவை மாநகராட்சி பகுதிகளில் தற்போது விநியோகிக்கப்பட்டு வரும் குடிநீரின் அளவு 40 எம்.எல்.டியிலிருந்து, 80 எம்.எல்.டி யாக உயர்ந்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். 

அதனைத் தொடர்ந்து இன்று (25.09.2017) கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன்,  தலைமையில் குடிநீர் சீராக விநியோகிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமான சிறுவாணி திட்டம், பில்லூர்-1, பில்லூர்-2, ஆழியார் திட்டம் மற்றம் பவானி (க.வ.திட்டம்) திட்டங்களிலிருந்து பெறப்படும் குடிநீரின் கொள்ளளவு குறித்து ஆணையாளர் கேட்டறிந்து, கூறிய அளவு குடிநீர் உயர்த்தி வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளுக்கும், மாநகராட்சி அனைத்து உதவி செயற்பொறியாளர்களுக்கும் உத்தரவிட்டார். அனைத்து உதவி ஆணையர்களும் குடிநீர் அளவு உயர்த்தி வழங்கப்படுகின்றனவா என களஆய்வு செய்து உறுதிபடுத்தி, வாரம் ஒருமுறை எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு குடிநீர் அளவு விநியோகிக்கப்படுகின்றன என்ற தகவல்களை ஆணையாளருக்கு தெரிவிக்குமாறு உத்தரவிட்டார். 



மேலும், சிங்காநல்லூர், பீளமேடு, ஒண்டிபுதூர் மற்றும் புலியகுளம் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி குடிநீரின் அளவை உயர்த்தி, சீராக வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். குடிநீர் அளவு உயர்ந்துள்ளதால் குடிநீர் லாரிகளை தேவையான இடங்களில் பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 

கடந்த வறட்சி காலங்களில் சிறப்பாக செயல்பட்டு குடிநீர் பிரச்சனையை சரிசெய்தது போல் வரும் காலங்களிலும் சிறப்பாக செயல்பட்டு குடிநீர் விநியோகம் சீராக வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். 

இக்கூட்டத்தில் துணை ஆணையாளர் ப.காந்திமதி, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் நடராஜன், மாநகர பொறியாளர் பார்வதி, செயற்பொறியாளர் லட்சுமணன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் சி.சொக்கலிங்கம், செயற்பொறியாளர்கள் உதய்சிங், ரவிச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அனைத்து மண்டல உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...