சிங்காநல்லூர் பகுதியில் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டுமென திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் வலியுறுத்தியுள்ளார்.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் சேதமடைந்த நிலையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில், அத்தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 960 வீடுகளை கொண்ட இந்த குடியிருப்பு சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மாற்று இடம் வழங்காமல் இங்கு குடியிருப்பவர்களை காலி செய்யுமாறு வீட்டு வசதி வாரிய துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இதுதொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உடனடியாக குடியிருப்பு வாசிகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும், இல்லையெனில் போராட்டங்களில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் சேதமடைந்த நிலையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில், அத்தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 960 வீடுகளை கொண்ட இந்த குடியிருப்பு சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மாற்று இடம் வழங்காமல் இங்கு குடியிருப்பவர்களை காலி செய்யுமாறு வீட்டு வசதி வாரிய துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இதுதொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உடனடியாக குடியிருப்பு வாசிகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும், இல்லையெனில் போராட்டங்களில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.