கோவை சங்கனூர் பகுதியில் அமைந்துள்ள முத்தாரம்மன் கோவிலில் தசரா பண்டிகையினை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக பல்வேறு வேடமணிந்து இன்று ஊர்வலமாக சென்றனர்.

இந்நிகழ்வின் போது வேண்டுதலுக்கு ஏற்ப காளி வேடம், கருங்காளி வேடம், சுடலைமாடச்சாமி வேடம் உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து ஊர்வலமாகச் சென்று பொதுமக்களிடம் தானம் பெருவது வழக்கம்.

ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த பண்டிகையின் இறுதி நாள் கொண்டாட்டத்திற்கு திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டிணத்தில் நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு சென்று வழிபடுவர்.
விஜயதசமிக்கு அடுத்தநாள் காளிக்கடவுள் அறக்கர்களை கொல்வது ஐதீக நிகழ்வாகும்.

கோவை முத்தாரம்மன் கோயிலில் கலைகட்டிய தசரா வழிபாட்டு நிகழ்வில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பல்வேறு வேடமணிந்து ஊர்வலமாக செல்வது காளி கடவுள் பக்தர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.