மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு திட்டங்களை எதிர்த்தும், அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு காரணமான நீட் தேர்வுமுறையை ரத்து செய்யவேண்டியும், நீட் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளின் செயல்களைக் கண்டித்தும் ஞாயிற்றுகிழமை மாலை உக்கடம் வின்செண்ட் சாலையில் மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் கருணாஸ், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு, கட்சி நிர்வாகிகள் மற்றும் ஐநூறுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த தமிமுன் அன்சாரி, நீட் தேர்வுமுறை ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வழியுறுத்தினார்.

மேலும் நவோதய பள்ளிகள் பற்றி எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், 'தமிழகத்திற்கு நவோதயா பள்ளிகள் தேவையில்லை, அரசு பள்ளிகளே போதும்', என்றும் கூறினார்.


இக்கூட்டதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் கருணாஸ், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு, கட்சி நிர்வாகிகள் மற்றும் ஐநூறுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த தமிமுன் அன்சாரி, நீட் தேர்வுமுறை ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வழியுறுத்தினார்.

மேலும் நவோதய பள்ளிகள் பற்றி எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர், 'தமிழகத்திற்கு நவோதயா பள்ளிகள் தேவையில்லை, அரசு பள்ளிகளே போதும்', என்றும் கூறினார்.
