செந்தில் பாலாஜி உறவினர்கள் வீடுகள், அலுவலகங்களில் அதிரடி சோதனை - முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

கரூரில் முன்னாள் அமைச்சரும், தினகரன் ஆதரவாளருமான செந்தில் பாலாஜி மற்றும் அவரது நண்பர் சரவணனுக்கு சொந்தமான நிதி நிறுவனதிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். வருவாய்க்கு அதிகாகமாக சொத்து சேர்த்ததாக கரூரில் 8 இடங்களில் வருமான வரித்துறையினர் 3-வது நாளாக நடத்திய சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த சோதனையின் போது, கருப்பு பணம் பதுக்கியதும், அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் வாங்கி வரி ஏய்ப்பு செய்ததும் தெரிய வந்தது. 

இந்த சோதனையில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும்,  ரூ.1.2 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், ரூ.50 கோடி மதிப்பு பினாமி சொத்து கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதோடு, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பரிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 3 லாரிகளை திண்டுக்கல்லில் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

பறிமுதல் செய்யப்பட்ட 3 லாரிகளும் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். 

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...